Sunday 5th of May 2024 05:15:10 AM GMT

LANGUAGE - TAMIL
-
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தடுப்பூசி ஏற்றும் பணிகள்!

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தடுப்பூசி ஏற்றும் பணிகள்!


அரசாங்கத்தினால் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள போதும் இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.மயூரனின் வழிகாட்டலில் மாவட்டத்தில் உள்ள பதினான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ரி.எஸ்.சஞ்ஜீவ் தலைமையில் இடம்பெற்றது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முப்பது வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வாழைச்சேனை பிரதேச சபை நூலகம், கல்குடா கிளினிக் நிலையம், கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகியவற்றில் முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் நடைபெற்றது.

தடுப்பு ஊசி ஏற்றும் பணியில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு பிரிவினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE